வீட்டிற்கு வந்த மருகளுக்கு 300 கோடி மதிப்புள்ள பொருளை பரிசாக கொடுத்த நீட்டா அம்பானி!!

1090

நீட்டா அம்பானி

அம்பானி மனைவி நிதா அம்பானி தன்னுடைய மருமகளுக்கு 300 கோடி கொண்ட நெக்லசை பரிசாக கொடுதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலககோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி திருமணம் கடந்த மார்ச் மாதம் 9-ஆம் திகதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஆகாஷ் அம்பானி தன்னுடைய நீண்ட நாள் தோழியான ஷோலகா மேத்தாவை கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன் மனைவியுடன் வந்திருந்தார்.

இந்நிலையில் நீட்டா அம்பானி தன் மருமகளுக்கு கொடுத்த பரிசு என்ன என்பது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில், நீட்டா ஷோலகா மேத்தாவுக்கு 300 கோடி மதிப்பு கொண்ட விலையுயர்ந்த வைர நெக்லசை பரிசாக கொடுத்துள்ளாராம். அதை கூடிய விரைவிலே ஷோலகா மேத்தா அணிவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.