பேஸ்புக் காதலால் வந்த வினை : திருமணம் முடிந்த 3 மாதத்தில் அம்பலமான காதலனின் உண்மை முகம்!!

639

அம்பலமான காதலனின் உண்மை முகம்

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன், ஆபாச புகைப்படங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவதாக இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

பொள்ளாச்சியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் பேஸ்புக்கில் பழக்கமான மதுரையை சேர்ந்த அஜித்குமார் என்பவரை காதலித்தது கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்த மகாலட்சுமி, திடீரென தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், திருமணம் முடிந்ததிலிருந்தே கணவரின் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், ஆபாச படங்களை வைத்துக்கொண்டு கணவன் மிரட்டுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.