2011-ல் தூக்கில் சடலமாக தொங்கிய கணவன் : தற்போது அவரின் மனைவி செய்துள்ள அதிரடி செயல்!!

842

2011-ல் தூக்கில் சடலமாக தொங்கிய கணவன்

சாதிக்பாட்சா மரணத்தில் மர்மம் உள்ளது எனவும் அவரது மரணம் குறித்து மறு விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரின் மனைவி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.

சென்னை தி.நகரில் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தவர் சாதிக்பாட்சா. இவருக்கு ரேஹா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 2ஜி வழக்கு உச்சத்தில் இருந்த நேரத்தில் சாதிக்பாட்சா வீட்டிலும் 2010-ம் ஆண்டு சிபிஐ சோதனை செய்தது. சோதனை நடந்த சில மாதங்களில் சாதிக்பாட்சா திடீரென தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வெளியானது.

இது தொடர்பாக சாதிக்பாட்சாவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில் கடந்த மாதம் சாதிக் பாட்சா நினைவு தினத்தை ஒட்டி வழக்கம்போல் அவர் மனைவி ரேஹா பானு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார்.

அதற்கு சில நாள் கழித்து அவர் இன்னோவா காரின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடந்தினர். இதையடுத்து தன்னைத் தாக்கவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என சாதிக்பாட்சாவின் மனைவி ரேஹா பானு காருடன் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் அளித்தார்.

இந்நிலையில் சாதிக்பாட்சா மரணம் மற்றும் தனது குடும்பத்தினருக்கு தொடர் அச்சுறுத்தல், தன்னைக் கொலை செய்ய சதி என அடுக்கடுக்கான புகார் ஒன்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சாதிக்பாட்சா மரண விசாரணையை மீண்டும் தொடங்க கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த புகாரில், எனது கணவர் சாதிக்பாட்சா 2003-ம் ஆண்டு கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். அது நன்றாக வளர்ச்சி அடைந்தது. எனது கணவரும், ஆ.ராசாவும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் நல்ல பழக்கம்.

இதையடுத்து 2006-ம் ஆண்டு எனது கணவரின் நிறுவனத்தில் ஆ.ராசா முதலீடு செய்தார். ஆ.ராசா மீது என் கணவர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் ஆ.ராசா தனது சகோதரியின் மகன் பரமேஷ்குமார் என்பவரையும், அவரது மனைவியையும் இயக்குநர்களாக நியமிக்க கேட்டுக்கொண்டார். அதன்படி இணைக்கப்பட்ட அவர்கள் காலப்போக்கில் கம்பெனிக்குள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

என்னையும், என் கணவரையும் தவறாக வழிகாட்டத் தொடங்கினர். பின்னர் எங்கள் நிறுவன டாக்குமென்ட்டுகளில் கையெழுத்திடும் அளவுக்கு வளர்ந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் 2010-ம் ஆண்டு 2ஜி விவகாரம் பெரிதானது. சிபிஐ தரப்பால் எனது கணவரும் விசாரிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் சாஹித் பல்வா என்கிற நபர் என் கணவருக்கு மிகுந்த அழுத்தத்தையும் மிரட்டலையும் விடுத்தார்.

இந்நிலையில் விசாரணை நடக்கும்போதே என் கணவர் 2011 மார்ச் 16 அன்று மர்மமான முறையில் மரணமடைந்தார். என்னுடைய கணவர் மன தைரியமிக்கவர். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நான் நம்பவில்லை. அப்போதைய சூழலில் என் கணவர் மரணம் குறித்த விசாரணை கோரவோ, சிபிஐக்கு போதிய தகவல் அளிக்கும் மனோபலம் இல்லை.

என்னுடைய கணவர் மரணத்திற்குக் காரணமான நபர்கள் தான் ஆட்களை ஏவி எங்கள்மீது தாக்குதல் தொடுத்தார்கள் என்று நம்புகிறேன். இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா உட்பட என் கணவர் யார் யாரை எல்லாம் குறிப்பிட்டாரோ அவர்களை விசாரிக்க வேண்டும். இதன்மூலம் என் கணவர் மரணத்தின் பின்னுள்ள மர்மங்கள் வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.