கணவர் சடலத்தை பார்த்து கதறி அழுது மயங்கிய மனைவி : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

1205

அதிர்ச்சித் தகவல்

புதுச்சேரியில் கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையை பொலிசார் கைப்பற்றிய நிலையில் அதில் 35 வயது நபரின் சடலம் இருந்தது.

விசாரணையில் அவரின் பெயர் கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதை பார்த்த அவர் மனைவி ஸ்டெல்லா கதறி அழுது மயங்கி விழுந்தார்.

ஆனால் ஸ்டெல்லாவின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட பொலிசார் அவரிடம் விசாரித்தபோது, கணவர் குடிபோதையில் கால்வாயில் விழுந்து உயிரிழந்திருப்பார் என்றும், தற்கொலை செய்திருப்பார் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

அவரது வீட்டில் ஆய்வு செய்தபோது, அங்கு அரிசி மூட்டை சாக்குகள் சிதறிக் கிடந்தன. இதற்கிடையே பிரேத பரிசோதனையில், தலையில் அடிபட்டு உயிரிழந்த கமலகண்ணனின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு இருப்பதும், பெண்ணின் கால்களால் அவரது முகம் மிதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஸ்டெல்லாவிடம் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

தினமும் குடித்து விட்டு தொல்லை தந்த கணவர் கமல கண்ணனுடன் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் கணவரை ஸ்டெல்லா அடித்து கீழே தள்ளியதாகவும், அதில் கமலக்கண்ணன் தலை சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாகவும் கூறப்படுகின்றது.

கொலையையும் சடலத்தையும் மறைக்க தனது சகோதரி ஜெரினாவிடம் யோசனை கேட்டுள்ளார் ஸ்டெல்லா. ஜெரினாவோ தனது ஆண் நண்பரான பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த தமிழ் மணி என்பவரை வரவழைத்துள்ளார்.

சாக்கு மூட்டைக்குள் அடைத்து சடலத்தை தூக்கி வீச முடிவு செய்துள்ளனர். அதன்படி வீட்டில் இருந்த அரிசி சாக்கு ஒன்றில் கமலக்கண்ணனின் சடலத்தை போட்டுள்ளனர். அதற்குள் தலையை அடைக்க முடியாத நிலையில் அவரது கழுத்தை காலால் மிதித்து முறித்து மூட்டைக்குள் அடைத்துள்ளார் ஸ்டெல்லா.

பின்னர் தமிழ்மணியுடன் இரு சக்கர வாகனத்தில் சடலத்தை கொண்டு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கழிவுநீர்க் கால்வாயில் வீசி சென்றதாக ஸ்டெல்லா பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து கமலகண்ணனின் மனைவி ஸ்டெல்லா, அக்கா ஜெரினா, அவரது ஆண் நண்பர் தமிழ்மணி ஆகிய 3 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.