வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

1189

இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

தமிழகத்தில் இளம்பெண்ணுக்கு அவர் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கும்மிடிபூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த குமரேசனின் மகள் ஆர்த்தி (21). பொறியியல் பட்டதாரியான ஆர்த்திக்கு அவர் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ஆர்த்தி மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆர்த்தியின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.