மீரா மிதுன்
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். மாடல் அழகியாக இருக்கும் இவர் மிஸ் சவுத் தமிழ்நாடு, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆஃப் சவுத் இந்தியா என பல பட்டங்களை வென்றுள்ளார்.
மிஸ் தமிழ்நாடு மண்டல இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் தமிழ்நாடு டீவா 2019 என்ற நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
தற்போது அவருடன் பணிபுரிந்த அஜீத் ரவி, ஜோ மைக்கேல் ஆகியோர் அதை நடத்த விடாமல் தடுப்பதாகவும், செல்போனை ஹேக் செய்து அந்தரந்த புகைப்படங்களை வெளியிடுவோம், கொலை செய்வோம் என மிரட்டியதாக அவர்கள் மீது போலிசில் புகார் அளித்துள்ளார்.