விபத்தில் சிக்கி பற்றி எரிந்த பயணிகள் விமானம் : 2 பேர் பலி, பலர் படுகாயம்!!

460

பற்றி எரிந்த பயணிகள் விமானம்

 

ரஷ்யாவில் பயணிகளுடன் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டு விபத்தில் சிக்கியதால், இரண்டு பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Angara Airlines flight நிறுவனத்திற்கு சொந்தமான An-24 பயணிகள் விமானம் Ulan Ude-வுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. புறப்பட்ட சில நிமிடங்களிலே விமானத்தில் ஒரு இன்ஜின் பழுதானதால், விமானம் அவசரசமாக தரையிறக்கப்பட்டது. அப்போது விமானம் ஓடுபாதையில் இருந்து 100 மீற்றர் சறுக்கி, ஒரு கழிவுநீர் கட்டடத்தின் மீது பயங்கரமாக மோதியதால், திடீரென்று தீப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த விபத்தின் காரணமாக இரண்டு விமானிகள் மற்றும் 7 பயணிகள் காயமடைந்திருப்பதாகவும், 43 பயணிகள் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் விபத்தில் சிக்கிய விமானம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பயணிகளின் முழுவிபரம் விசாரணைக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.