பேத்தியை து டிது டிக்க கொ ன்று பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்த தாத்தா!!

798

பேத்தியை..

கோவை மாவட்டத்தில் மகனை பழிவாங்குவதற்காக 10 மாத பேரக்குழந்தையை தாத்தாவே கொ லை செய்துள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்த செல்வராஜ் (44) என்பவர் வளர்மதியை முதல் மனைவியாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குமார் (24) என்கிற மகனும் முத்துமாலை (24) என்கிற மருமகளும் உள்ளனர்.

15 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வளர்மதி கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து வேலை செய்யும் இடத்தில் பழக்கமான சக்திகனி என்பவரை செல்வராஜ் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இது குமார் குடும்பத்திற்கு பிடிக்காததால் அடிக்கடி த கராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சக்திகனியும் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் ஆ த்திரமடைந்த செல்வராஜ், நேற்று காலை ம து அருந்திவிட்டு குமார் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். கையில் 10 மாத கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த முத்துமாலையை தரையில் தள்ளிவிட்டு பேரக்குழந்தையுடன் செல்வராஜ் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார்.

இந்த தகவல் அறிந்த குமார் நீண்ட நேரம் தேடிபார்த்துவிட்டு பொலிஸாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் பொலிஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் செல்வராஜ், தனது உறவினரிடம் செல்போனில், தன்னையும், குழந்தையையும் தேட வேண்டாம். எனது மனைவி சக்திகனியை என்னிடம் வரச்சொல்லுங்கள் என்று கூறியதோடு, செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

உடனே செல்போன் சிக்னலை ஆய்வு செய்த பொலிஸார் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் வைத்து செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், குமார் குடும்பத்தால் தான் என்னுடைய இரண்டாவது மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் குழந்தையை கடத்தி செங்கல்லால் அ டித்து கொ லை செய்து பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்திருப்பதாகவும், ரயிலில் வெளியூருக்கு தப்ப முயன்றபோது பொலிஸார் கைது செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.