பகலில் பிச்சைக்காரன் : இரவில் காட்டுப்பகுதியில் பெண்களுடன் ஜாலியாக இருப்பேன் : அதிரவைத்த வாக்குமூலம்!!

1266

அதிரவைத்த வாக்குமூலம்

தமிழகத்தில் பகலில் பிச்சைக்காரன் போல நடித்துவிட்டு இரவில் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இளைஞர் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது அத்திரிமலை. இங்குள்ள கோரக்கநாதர் கோயிலுக்கு போக வேண்டுமானால் கல்லாற்றை கடந்து தான் போக வேண்டும்.

இந்தக் கல்லாற்றின் பக்கத்தில் ஒரு ஓலை குடிசை இருந்த நிலையில் இரவில் இங்கு நடமாட்டம் தெரியவும், சுப்ரமணி என்ற நபர் வனத்துறையினரிடம் சிக்கினார். அவரை எச்சரித்த அதிகாரிகள் இங்கெல்லாம் வரக்கூடாது என கூறி விரட்டியுள்ளனர்.

ஆனாலும் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது. அதனால் வனத்துறையினர் ரகசியமாக சுப்ரமணியை கண்காணித்தனர். பிறகு கையும் களவுமாக பிடித்து நடத்திய விசாரணையில், அவர் காட்டுக்குள் குடிசை அமைத்து தங்கி வந்தது தெரியவந்தது.

மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், பகலில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து, ரயில்களில் கொள்ளை அடிப்பாராம். மேலும் அழுக்கு உடையுடன் ரயிலில் ஏறி பிச்சை எடுப்பார், அப்போது தனியாக பெண்கள் மட்டும் இருந்தால் செயினை பறிப்பார்.

இப்படி கிடைக்கும் பணத்தில் கஞ்சா அடிப்பது, பெண்களை காட்டுப்பகுதி குடிசைக்கு இரவு நேரங்களில் அழைத்து வந்து ஜாலியாக இருப்பது என கடந்த ஐந்து வருடங்களாக இருந்துள்ளார். இதை தொடர்ந்து சுப்ரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.