கேரளா பெண்களுக்கு அழகே தலைமுடி என்ற நிலையில் அதை தானம் அளித்த பெண்!!

568

பெண்களுக்கு அழகே தலைமுடி..

கேரளாவில் அழகாக தலைமுடியை பராமரித்து நீளமாக வளர்த்து வந்த பெண் புற்றுநோயாளிகளுக்கு அதை தானமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அபர்ணா லவகுமார். இவர் சிவில் காவல் அதிகாரி ஆவார். பொதுவாக, கேரள பெண்களுக்கு தலைமுடியே தனி அழகுதான். அந்த வகையில் அபர்ணாவுக்கும் தலைமுடி முழங்கால்வரை நீண்டு தொங்கும்.

இந்நிலையில், தன்னுடைய தலைமுடியை புற்றுநோயாளிகளுக்கு காணிக்கையாக அவர் தந்துள்ளார். இது குறித்து அபர்ணா கூறுகையில், கீமோதெரபி சிகிச்சைக்கு பின் தலைமுடி இல்லாமல், வாடும் புற்றுநோயாளிகளை பார்த்து தான் இப்படி ஒரு உதவி செய்ய முடிவு செய்தேன்.

புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை, உடன் படிக்கும் பிள்ளைகள் கிண்டல், கேலி செய்கிறார்கள். இதனால் இந்த பிள்ளைகள் மனம் உடைந்து போகிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த முடிவு என கூறியுள்ளார்.

அபர்ணாவின் இந்த செயலுக்கு காவல்துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.