சினிமாவை மிஞ்சிய சம்பவம்
தமிழகத்தில் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற சகோதரன் கொ லை செய்யப்பட்டு பு தைக்கப்பட்ட சம்பவத்தில், விசாரணையில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). பைனான்சியரான இவருக்கு வசந்தமணி(47) என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிக்கு சரண்யா என்ற மகளும், பாஸ்கரன் என்ற மகனும் உள்ளனர். சரண்யாவுக்கு திருமணம் ஆகி, மதுரையில் வசிக்கிறார். பாஸ்கரன், சென்னையில் பைனான்ஸ் மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார். சமீபத்தில், பாஸ்கரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதனால் உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து வந்த செல்வராஜ், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உத்தண்டிகுமாரவலசுவில் வசிக்கும் அக்கா கண்ணம்மாள் (54) வீட்டிற்கு பத்திரிக்கை கொடுக்க தன் மனைவியுடன் சென்றுள்ளார்.
இந்தநிலையில், கரூர் மாவட்டம் சுக்காலியூர் திருச்சி அணுகுசாலையில் செல்வராஜின் கார் தனியாக நின்று கிடப்பதை கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்ததால், பொலிசார் காரை பார்வையிட்டனர்.
அதன் பின், வெள்ளகோவிலில் உள்ள கண்ணம்மாள் வீட்டுக்கு சென்று விசாரித்த போது, கண்ணம்மாள், டீயில் ம யக்க மாத்திரை கலந்து கொடுத்து தம்பதியை கொன்று வீட்டு பக்கத்தில் பு தைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் அதன் பின் அவரின் ச டலங்களை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கண்ணம்மாள், மருமகன் நாகேந்திரன், மகள் பூங்கொடி இவர்களது உறவினர் ஒருவர் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், செல்வராஜ் கடந்த மாதம் தனக்கு சொந்தமான தோட்டத்தை 45 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதில் அவர் தனது இரு சகோதரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் கண்ணம்மாளோ என 50 ஆயிரம் ரூபாய் எல்லாம் வேண்டாம், 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன் கண்ணம்மாள் வீட்டிற்கு சென்ற இவர் 1 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு, நான் என் மகனின் திருமண பத்திரிக்கை கொண்டு வருவதாக தெரிவித்து சென்றுள்ளார்.
5 லட்சம் ரூபாய் கேட்டதற்கு ஒரு லட்சம் ரூபாயும், ஏற்கனவே கண்ம்மாளின் மகள் கலப்பு திருமணம் செய்து கொண்டதற்கு அவர் எ திர்ப்பு தெரிவித்ததால், இந்த பண விஷயம், மகள் திருமணத்தில் எ திர்ப்பு தெரிவித்தது என்று கோபத்தில் இருந்த கண்ணம்மா அவரை கொ லை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன் படி, கடந்த 10-ஆம் திகதி செல்வராஜ் திருமண பத்திரிகை கொடுக்க மனைவியுடன் காரில் வந்துள்ளார். கண்ணம்மாளிடம் அழைப்பிதழ் தந்துவிட்டு, வீட்டில் சாப்பிட்ட பின், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
கண்ணம்மாள், தனது மருமகன் உங்களை பார்த்து பேச வேண்டும் என நினைக்கிறார். சிறிது நேரம் காத்திருங்கள் வந்துவிடுவார் என கூறிவிட்டு, வீட்டிற்கு வெளியே சென்று குழி வெட்டியுள்ளார்.
சிறிதுநேரத்தில் 5 பேருடன் வந்த நாகேந்திரன், தம்பதியரை தா க்கி கொ ன்று குழிக்குள் புதைத்து விட்டு, யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க காரை அங்கு சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.