திருமணமாகி 7 ஆண்டுகளாக கர்ப்பமாகவில்லை : குழந்தை பிறப்பதற்காக சாமியாரை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

410

பெண்ணுக்கு நேர்ந்த கதி

சென்னையில் திருமணமாகி ஏழு ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்ணுக்கு குழந்தை பிறக்க வழி செய்வதாக கூறி மோ சடி செய்த சாமியாரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

தியாகராயநகரை சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் வித்யாவுக்கு திருமணமாகி, 7 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்வியின் உறவினர் மாலதி என்பவர் அவருக்கு சாமியார் ஒருவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அப்போது அந்த சாமியார் வித்யாவிற்கு செய்வினை இருப்பதாகவும், அதை நீக்கினால் உடனடியாக குழந்தை பிறக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் சாமியார் கேட்ட ரூ 1 லட்சத்தை எடுத்து கொண்டு நேற்று முன்தினம் மாலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வியும், வித்யாவும் வந்தனர்.

அங்கு வந்த சாமியார், செல்வியிடம் ஒரு லட்ச ரூபாயினை வாங்கிய பின்னர் செய்வினை நீக்க, பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், அதற்குரிய பொருள்கள் மற்றும் கோழி ஆகியவற்றை வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.

ஆனால் வெகுநேரம் ஆகியும் சாமியார் திரும்பி வராததால் ஏமாற்றம் அடைந்த செல்வி இது குறித்து பொலிசில் புகாரளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதோடு மோசடி சாமியாரை தேடி வருகிறார்கள்.