மாணவனின் தலையை பதம் பார்த்த 3 கிலோ இரும்பு கு ண்டு : க தறி அ ழுத மாணவிகள்!!

411

கதறி அழுத மாணவிகள்..

கேரளாவில் ஹேமர் த்ரோ போட்டியாளரால் வீசப்பட்ட இரும்பு கு ண்டு தலையில் தாக்கி பள்ளி மாணவர் உ யிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் அபீல் ஜான்சன் (17). இவர் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கேரள மாநில ஜூனியர் தடகளப் போட்டியில் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்தார்.

கடந்த 4-ம் திகதி நடைபெற்ற தடகளப் போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் `ஹேமர் த்ரோ’ பிரிவில் தன்னார்வப் பணியில் ஈடுபட்டிருந்த அபீல், போட்டியாளர்களால் வீசப்பட்ட ஈட்டிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது `ஹேமர் த்ரோ’ போட்டியாளரால் வீசப்பட்ட 3 கிலோ எடையுள்ள இரும்புக் கு ண்டு அபீலின் தலையில் பலத்த வேகத்துடன் மோ தியது. இதனால் அவருக்கு மூளையில் கா யம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் உ யிருக்குப் போ ராடி வந்த அபீல் ப ரிதாபமாக உ யிரிழந்தார். இச்சம்பவம் அவரின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் இ றந்த செய்தியை கேட்டு உடன் படித்த நண்பர்கள் க தறி அ ழுதனர்.

அபீல் ம ரணம் தொடர்பாக பேசிய பொலிசார், இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் மீது சட்டப் பிரிவு 338-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.