வீதியில் கணவன் கண்முன்னே துடி துடித்து இ றந்த மனைவி!!

277

வீதியில் கணவன் கண்முன்னே..

தமிழகத்தில் சாலையில் இருந்த பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் கணவன் முன்னே மனைவி துடிதுடிக்க இ றந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (40). அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வரும் இவருக்கு தேவி(35) என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதி சிப்பாய் நகர் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் ராமதாஸ் தன் மனைவியுடன் நசரதேபேட்டைக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் இருந்த பள்ளம் மழைநீரால் நிரம்பியிருந்ததை அறியாமல், இருசக்கர வாகனத்தை பள்ளத்தில் இறக்கிவிட, இருசக்கர வாகனம் நிலைகுலைந்து, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியதால், இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் தேவியின் உடல் மீது கண்டெய்னர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே ப ரிதாபமாக துடி துடித்து இ றந்தார்.

ராமதாஸ் லேசான காயங்களுடன் உ யிர் தப்பிய நிலையில், தன் மனைவி கண்முன்னே துடி து டிக்க இ றந்ததால் அதைக் கண்டு கதறினார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இ றந்து கிடந்த தேவியின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால், விபத்துகளில் சிக்கி இதுவரை மூன்று உ யிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த சாலையை சரி செய்யும் படி அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.