நேர்ந்த விபரீதம்
தமிழகத்தின் குமரி மாவட்டத்தில், டியூசன் ஆ சிரியையிடம் 11ஆம் வகுப்பு மாணவன் த காத முறையில் நடக்க முயற்சித்ததுடன், க த்தியால் கு த்திய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஷானி(25). இவர் பி.எட் படித்துவிட்டு, தனது வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த ஜெபமணி என்பவரின் மகன் ஜெனிஸ்(16) என்ற 11ஆம் வகுப்பு மாணவனும், மெர்லினிடம் டியூசன் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்றைய தினம் மெர்லினின் வீட்டிற்கு சென்ற ஜெனிஸ், திடீரென்று அவரிடம் த வறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனை எதிர்பார்க்காத மெர்லின் அ திர்ச்சியில் கூ ச்சலிட்டுள்ளார். இதனால் பதற்றமான மாணவன் ஜெனிஸ், தன் கையில் மறைத்து வைத்திருந்த க த்தியால் மெர்லினின் உ டலில் ச ரமாரியாக கு த்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
ஆசிரியையின் அ லறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ர த்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உ யிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தலைமறைவாகியுள்ள ஜெனிஸ் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார், அவரை தேடி வருகின்றனர். டியூசன் ஆசிரியையை மாணவன் க த்தியால் கு த்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.