அதிர்ச்சி உண்மை
தமிழகத்தில் சாலையோரத்தில் ச டலமாக கிடந்த 9 மாத கர்ப்பிணி பெண் வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக கணவரே அவரை கொ லை செய்தது தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மாத கர்ப்பிணி ஒருவர் இரு தினங்களுக்கு முன்னர் சாலையோரமாக ச டலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விசாரணை நடத்தியதில் இ றந்து கிடந்தவர் தினேஷ் குமார் என்பவரின் மனைவி சுஷ்மிதா (20) என்பது தெரியவந்தது.
சுஷ்மிதாவின் உ டலில் உ யிர் பிரிந்து 5 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டதால் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மேலும் சுஷ்மிதா கழுத்தில் இருந்த நகைகள் காணாமல் போனதால் அவர் நகைக்காக கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதினார்கள்.
ஆனால் இந்த வழக்கில் அ திரடி திருப்பமாக கணவர் தினேஷ்குமாரே மனைவி சுஷ்மிதாவை கொ லை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. இது குறித்து பொலிசார் கூறுகையில், தினேஷ்குமாரும், சுஷ்மிதாவும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தனது மாமியார் வீட்டிலேயே மனைவியுடன் வசித்து வந்துள்ளார். மருமகனுக்காக அவரது மாமனார் கனகராஜ் டாடா ஏஸ் வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து மனைவியை நன்றாக கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே திருமணமான வேறு பெண்ணுடன் தினேஷ்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது, இதை கண்டுபிடித்த சுஷ்மிதா கணவரை கண்டித்தார். இதையடுத்து காதலியின் அறிவுரையின்படி மனைவியை கொ ல்ல தினேஷ்குமார் திட்டமிட்டார்.
அதன்படி மனைவியை தனிமையான இடத்துக்கு அழைத்து சென்ற தினேஷ்குமார் அவர் க ழுத்தை நாய் பெல்ட்டால் நெ ரித்து கொ லை செய்துள்ளார். பின்னர் இது கொ ள்ளைக்காக நடந்த கொ லை என்பது போல காட்ட அவர் க ழுத்தில் இருந்த நகைகளை எடுத்து சென்றுள்ளார்.
இதன்பிறகு தனது வீட்டுக்கு வந்து சுஷ்மிதா இங்கு வந்தாரா என கூடி நாடகம் ஆடியதோடு அவர் ச டலம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை கட்டி பிடித்து அழுத்து புரண்டு தினேஷ்குமார் நடித்துள்ளார்.
அவரிடம் நாங்கள் விசாரித்த போது விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே என் மனைவியை நகைக்காக கொ லை செய்து விட்டனர் என வார்த்தைக்கு வார்த்தை கூறியதால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. பின்னர் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் உண்மையை ஒப்பு கொண்டார் என கூறியுள்ளனர்.