சுர்ஜித்
சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில், அது குறித்த தவல்களை சம்பவ இடத்திலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மணப்பாறை நெடுக்காப்பட்டியில், சுர்ஜித்தை மீட்கும் பணிகள் விரைத்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி தற்போது 43மணி நேரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அவர், குழந்தைய மீ ட்கும் பணிகள் தீவிரமாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அ திர்வுகளால் துகள்கள் அதிகம் விழாமல் இருக்கும்படி பார்த்து கொண்டிருப்பதாகவும், கை லேசாக தெரிவதாகவும், ஆனால் கையில் அசைவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஒவ்வொரு அடி குழி தோண்டும்போதும் ப தற்றத்துடன் கமெரா காட்சியை பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தையின், பெற்றோரிடம் சரிவர தகவல்களை தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.