தம்பி எழுந்துவா…. வாசகத்துடன் சுர்ஜித்திற்காக காத்திருக்கும் இளைஞர்!!

359

தம்பி எழுந்துவா…

சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள இடத்தில், இளைஞர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நேற்று முந்தினம் மாலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 42 மணி நேரத்திற்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், பொதுமக்கள் பலர் தீபாவளி பண்டிகை என்றும் பாராமல், சிறுவன் சுர்ஜித்திற்காக வழிபாட்டு தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைப்பெற்று வருகின்றது. மேலும், சுற்றுவட்டார கிராமமக்கள் திபாவளியை முற்றிலும் புறக்கணித்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்தில் நபர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது அவரது சட்டையில் எழுத்துவா தம்பி என்ற வாசகத்துடன் சுர்ஜித்தின் வருகைக்காக காத்திருக்கிறார்.

மேலும், அவர் குழந்தை குழியில் விழுந்த அன்று மாலையில் இருந்து சுர்ஜித்தின் வருகைக்காக காத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.