முதலில் அறிவித்த ஒன்றரை மணி நேரம் ….துழையிட 7 மணி நேரம் கடந்து தொடரும் பரிதாபம்!!

465

தொடரும் பரபரப்பு

சுர்ஜித்தை மீட்க பக்கவாட்டி போடப்படும் துழை ஒன்றரை மணி நேரத்தில் முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் துழையிடும் பணிகள் நிறைவடையவில்லை.

சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துழை கிணற்றில் விழுந்து 45மணி நேரங்கள் கடந்துவிட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், முன்னதாக பல முயற்சிகள் கையாண்டு தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது பக்கவாட்டில் ரிங் இயந்திரம் கொண்டு துழையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் துவங்கும் முன் 1 1/2 மணி நேரத்தில் முடிக்கப்படும் என்று அதிகரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 7மணி நேரம் கடந்தும் இந்த பணிகள் நிடைவடையவில்லை. குறிப்பாக பாறைகள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால், துழையிடும் பகுதியில் பல சிக்கல்கள் நீடிப்பதாக அதிகரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.