மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மழை : மணல் மூட்டைகளை அடுக்கும் வீரர்கள்!!

305

மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மழை

திருச்சியில் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெறும் இடத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணல்மூட்டைகளை அடுக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மணைப்பறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி, 49 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகிறது.

பக்கவாட்டில் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பனி 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 40 அடி ஆழம் வரை பாறைகள் சூழ்ந்திருப்பதால் மீட்பு பணி இரவு 11 மணியை நெருங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மீட்பு பணி நடைபெற்று வரும் இடத்தில் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், மழை தண்ணீர் உள்ளே செல்லாமல் இருக்க மணல் மூட்டைகளை மீட்புப் படை வீரர்கள் அடுக்கி வருகின்றனர்.