முட்டை வாங்கி தராத கணவனை விட்டு ஓட்டம் பிடித்த மனைவி!!

249

முட்டை வாங்கி தராததால் கணவனை விட்டு மனைவி ஓட்டம் பிடித்துள்ள வினோத சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் ஒருவர் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு வீடு திரும்பியுள்ளார்.

அந்த பெண்ணுக்கு முட்டை என்றால் அதிகம் பிடிக்கும் என்பதால் தினமும் கணவரை முட்டை வாங்கிவருமாறு கூறியுள்ளார். ஆனால் தினசரி கூலித் தொழிலாளியான அவரால் தினமும் வாங்கி கொடுக்க முடியவில்லை.

இதனால் மகிழ்ச்சியில்லாமல் இருந்த அந்த பெண், சனிக்கிழமையன்று கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் மா யமாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, அந்த பெண்ணின் காதலனும் வீட்டிலிருந்து மாயமாகியிருந்ததால் இருவரும் மீண்டும் ஓட்டம் பிடித்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், எனக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் தினமும் முட்டை வாங்கி கொடுக்க முடியவில்லை.

ஆனால் இதனை சாதமாக பயன்படுத்திக்கொண்ட என் மனைவியின் காதலன், தினமும் முட்டை வாங்கிக்கொடுத்து ஏமாற்றிவிட்டான் என குற்றம் சுமத்தியுள்ளார்.