ம ர்மமாக இ றந்த பெண் குழந்தை : உடலை தோண்டி எடுத்து பி ரேத பரிசோதனை!!

375

பெண் குழந்தை

தமிழகத்தின் ஒசூர் அருகே ம ர்மமாக இ றந்த கைக்குழந்தையின் ச டலத்தை தோண்டி எடுத்து பி ரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சசிகலா (23). இவர்களுக்கு மூன்று வயதில் ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 23 ஆம் திகதி சானமாவு கிராமத்திற்கு வந்த செவிலியர் ரஜினி கார்த்திகா குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார்.

அடுத்த நாள் காலை குழந்தை ம ர்மமான முறையில் இ றந்துள்ளது. மருத்துவர்கள் குழு விசாரணை நடத்தி, தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை இ றக்கவில்லை என தெரிவித்தனர்.

இதனால் குழந்தையை பெற்றோர் அடக்கம் செய்தனர். இந்நிலையில், உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி உதயகுமார்,

குழந்தை இ றப்பில் ம ர்மம் உள்ளதாகவும், 45 நாட்களில் போடவேண்டிய தடுப்பூசி 40 நாட்களில் போட்டதால் உ யிரிழப்பு எனவும் நேற்று முன்தினம் உத்தனப்பள்ளி காவல்துறையிடம் புகார் செய்தார்.

இதனால், வருவாய்த்துறை மற்றும் பொலிசார் முன்னிலையில் அ டக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உ டலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குழந்தை இ றந்ததற்கான காரணம் தெரியவரும், மேலும் இதுகுறித்து உத்தனப்பள்ளி பொலிசார் மற்றும் சூளகிரி வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.