பாதியில் கைவிடமாட்டோம்….. தொடரும் மழை : சுர்ஜித் மீட்பு பணியில் தொடரும் சோகம்!!

353

சுர்ஜித் மீட்பு பணி

மழை பொழிந்தாலும், மீட்புப் பணியை பாதியில் கைவிடமாட்டோம் என்று வருவாய் நிவாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது நடுக்காட்டுப்பட்டியில் வேகமாக மழை பெய்து வருகின்றது. இது குறித்து பேசிய அவர், குழந்தை மீட்பு பணியில் பல சிக்கல்கள் இருந்தாலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

குழந்தையின் பெற்றோரிடம் மனநல நிபுணர்கள் மூலம் சில ஆலோசனைகள் வழங்கி வருகின்றோம். இந்த பணிகளை எக்காரணம் கொண்டும் பாதியில் கைவிடமாட்டோம்.

குழந்தையை மீட்க இன்னும் 12 மணி நேரம் ஆகும். எனவே யார் இந்த பணியை முன்னெடுக்க வந்தாலும் அவர்களுக்கு வாய்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், முயற்சியை பாதியில் கைவிடமாட்டோம் என்று ராதாகிருணன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊடகங்களின் மூலம் தவறான தகவல்கள் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார்.