சுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் தாமதம்
சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஆழ்துளை கிணற்றுக்குள் செல்ல தற்போது 12பேர் தயாராக உள்ளனர். நெடுக்காட்டுப்பட்டியில், சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில், ஆழ்துளை கிணற்றுக்குள் செல்ல நேற்று முதலில் மூன்று பேர் தயாராக இருந்தனர்.
பின் 7பேர் தயார் நிலையில் இருந்தனர். தற்போது மொத்தம் 12பேர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 12 பேரும் இரண்டு இரண்டு பேராக உள்ளே சென்று பக்கவாட்டில் துழையிடும் பணியில் ஈடுபடுவார்கள். இருவர் வெளியில் வந்ததும், மற்ற இருவர் உள்ளே செல்வார்கள்.
இவ்வாறு உள்ளே செல்லும் அனைவருக்கும் மூச்சை அடக்கி பணி செய்யும் அளவிற்கு திறன் படைத்தவர்களாக இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான அளவில் மனவலிமை மற்றும் உடல் வலிமை உள்ளதா என்று சோதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.