மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் பிரார்த்தனையில் பிரபல நடிகர்!!

389

பிரார்த்தனையில் பிரபல நடிகர்

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நடிகர் தாமு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சியின் நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுர்ஜித் எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.

குழந்தையை மீட்க கடந்த 63 மணிநேரமாக மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகமே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகரான தாமு மீட்புப்பணி நடைபெறும் இடத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்.

தற்போது வரை ரிக் இயந்திரத்தின் மூலம் 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.