மருத்துவர்கள் வழங்கிய கெடு முடிய இன்னும் குறுகிய நேரம்? சுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் சோகம்!!

344

சுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் சோகம்

குழந்தை சுர்ஜித் துளையில் சிக்கி தற்போது 67 மணி நேரம் கடந்துவிட்டது. மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் 2வயது குழந்தை சுர்ஜித் கடந்த 25ஆம் திகதி மாலை நேரம் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்தான்.

அவனை மீட்க அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சுர்ஜித் குழியில் விழுந்து தற்போது 67 மணி நேரம் கடந்துவிட்டது.

முன்னதாக மருத்துவர்கள் தரப்பில் 75மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டுக்கொடுத்தால் நிச்சயம் காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 5 மணி நேரத்திற்குள் குழந்தை மீட்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.

துழையிடும் பணி நேற்று காலை 7:05க்கு துவங்கிய நிலையில், 25மணி நேரத்தை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், சென்னையில் இருந்து புதிய துளையிடும் கருவி வரவழைக்கப்பட்டுள்ளது. சுர்ஜித் விரைவில் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையில் தமிழக மக்கள் காத்திருக்கிறனர்.