தாயை கொ லை செய்து..
தனது காதல் விவகாரங்களை எ திர்த்ததற்காக பெற்ற தாயை மகளே கொ லை செய்துள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் சேர்ந்த 39 வயதான ரஞ்சிதா தனது 19 வயது மகள் கீர்த்தி ரெட்டியால் கொ லை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பொலிஸாரின் கூற்றுப்படி, கீர்த்தி இரண்டு இளைஞர்களுடன் பழக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரஞ்சிதா தன்னுடைய மகளை கண்டித்துள்ளார்.
இதனால் அவரை கொ லை செய்ய முடிவெடுத்த கீர்த்தி, அக்டோபர் 18 ம் திகதி அன்று தன்னுடைய காதலனை வீட்டிற்கு வரவழைத்து, ரஞ்சிதாவின் கால்களை இறுகப்பிடித்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துள்ளார்.
அதன்பிறகு மூன்று நாட்களாக வீட்டிலேயே ச டலத்தை வைத்திருந்துள்ளனர். துர்நாற்றம் வீச ஆரம்பித்த பின்னர், தங்கள் மீது சந்தேகம் வராதபடி தற்கொ லை என மாற்றுவதற்காக ரயில்நிலைய தண்டவாளத்தில் சடலத்தை வீசியுள்ளனர்.
இதற்கிடையில் டிரைவராக பணிபுரிந்து வரும் கீர்த்தியின் தந்தை சீனிவாஸ் ரெட்டி, வீடு திரும்பியுள்ளார். ரஞ்சிதா குறித்து கேட்டபோது, விசாகப்பட்டினம் சென்ற அவர் வீடு திரும்பவில்லை என கீர்த்தி சமாளித்துள்ளார். அதன்பிறகு பொலிஸ் நிலையும் சென்ற சீனிவாஸ், ரஞ்சிதாவை கா ணவில்லை என பொலிஸாரிடம் புகார் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கீர்த்தி மற்றும் அவருடைய காதலனை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.