சுர்ஜித்திற்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்பட கூடாது : சுர்ஜித்தின் தாய் உருக்கம்!!

291

சுர்ஜித்தின் தாய் உருக்கம்

சுர்ஜித் உ யிருடன் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை செய்த அத்தனை பேருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என சுர்ஜிதின் தாய் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தனது மகனை எப்படியாவது உ யிருடன் மீட்க வேண்டும் என பலரும் போ ராடினார்கள். தமிழக அரசு சார்பிலும், முடியுமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அனைத்து தரப்பினர்களும் அருகிலேயே இருந்து சுர்ஜித்தை மீட்க வேண்டும் என அயராது பாடுபட்டிருந்தனர். இடையில் இருந்த பாறையினாலேயே சுர்ஜித்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சுர்ஜித்திற்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் வரவே கூடாது. ஆகையினால், முன்னொரு காலத்தில் தோண்டப்பட்ட அனைத்து ஆழ்துளை கிணறுகளும் மூடப்பட வேண்டும்.

சுர்ஜித் என் வீட்டு பிள்ளை என்றே நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எல்லோம் அவனை உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து பிராரத்தனை செய்தீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், உ யிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல், பிரேத பரிசோதனைகளின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.