அவுஸ்திரேலியாவில் மலர்ந்த காதல் : சீனப் பெண்ணை மணந்த தமிழ் இளைஞர்!!

320

அவுஸ்திரேலியாவில் மலர்ந்த காதல்

அவுஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வரும் தமிழக இளைஞர், சீனாவை சேர்ந்த இளம்பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்துள்ளார்.

சேலத்தை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் அருண்பிரசாத் (34). இவர் அவுஸ்திரேலியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், அங்கு உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சீனாவை சேர்ந்த கிறிஸ்டல் ஜியாங் (31) என்கிற பெண்ணுக்கும் அறிமுகம் கிடைத்துள்ளது.

இருவரும், பகுதிநேரமாக அவுஸ்திரேலியாவில் வேறு ஒரு இடத்தில் வேலை பார்க்கும்போது பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது.

முதலில் அருண்பிரசாத் காதலை கூறும்போது கிறிஸ்டல், ஏற்றுக்கொள்ள தயங்கியுள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து கிறிஸ்டலும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, அந்த காதல் 5 வருடங்களாக தொடர்ந்துள்ளது.

இதற்கிடையில் இருவரும் தங்களுடைய வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவர்களது திருமணம் தமிழில், கிறிஸ்தவ முறைப்படி நேற்று காலை சேலத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் நடைபெற்றது.

இதில் அருண்பிரசாத் சார்பில் ஏராளமான உறவினர்களும், கிறிஸ்டல் ஜியாங்கின் பெற்றோரும் கலந்துகொண்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தம்பதியினரின் திருமண வரவேற்பு சீனாவில் நடைபெறும் எனவும் திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர்.