வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள போகும் இரண்டு ராசிக்காரர்கள்..! எப்படி ஆபத்தில் சிக்குவதை தவிர்க்கலாம்?

1174

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள்.அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மகரம்:தேவையில்லாத வீண் செலவுகள் வந்து, உங்களுடைய செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். வேலையிடங்களில், பணிகளில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் மிக நீண்ட உயரத்துக்குச் செல்வீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது மிக நல்லது.

இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 7ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அமையும்.மௌன வித்தை கடைப்பிடித்தால் இன்று பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

சிம்மம்:தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை சார்ந்து தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயுள்ள பிரச்னைகள் குறைந்து உறவுகள் மேலோங்கும்.

கடன்கள் பெருகும். தனால் மனவருத்தம் அதிகரிக்கவே செய்யும். எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமான சூழலைப் பெற்றுத் தரும்.

இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 2ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளையும் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் இருக்கிறது. மௌன வித்தை கடைப்பிடித்தால் இன்று பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.