தாய், மகன், பேரன் அடுத்தடுத்து போன உ யிர் : ஒருவரை ஒருவர் கா ப்பாற்ற சென்ற போது நடந்த துயரம்!!

395

தமிழகத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால், ஒருவரை ஒருவர் கா ப்பாற்ற சென்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் ஒப்பாயி (75). இவருக்கு ராமமூர்த்தி (50) என்ற மூத்த மகன் உள்ளார்.

விவசாயியாயான ராமமூர்த்திக்கு, நவலூர்குட்டப்பட்டு பகுதியில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்ததால், வயல் பாசனத்துக்காக வெட்டப்பட்ட கிணறும், அருகே மின் மோட்டார் இணைப்புக்காக அமைக்கப்பட்ட மின் கம்பமும் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில், வயலுக்கு உரம் தெளிப்பதற்காக, ராமமூர்த்தி, தனது மகன் குணசேகரன்(23) மற்றும் தாய் ஒப்பாயியுடன் சென்றுள்ளார்.

கரையில், ஒப்பாயியும், அவரது மகன் ராமமூர்த்தியும் நின்று கொண்டு உரம் கலந்து கொடுக்க, வயலில் இறங்கி குணசேகரன் உரத்தை தெளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வயல்வெளிக்கு மேலே இருந்த மின்கம்பி அ றுந்து வி ழுந்ததால், வயலில் இருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து ராம்மூர்த்தி மீது பாய்ந்தது.

இதனால் ராமமூர்த்தி து டிப்பதைக் கண்ட, வரப்பில் இருந்த ஒப்பாயி மற்றும் அவரது மகன் குணசேகரன் அவரை கா ப்பாற்றுவதற்காக வயலில் இறங்கிய ஓடிய போது, அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததால், மூன்று பேரும் சம்பவ இடத்திலே ப ரிதாபமாக து டிதுடித்து இ றந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் 3 பேரின் உ டலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.