காதலனை சந்திக்க சென்ற இளம்பெண்ணை உ யிருடன் தீ வைத்து எ ரித்து கொ லை செய்ய முயற்சித்தவர்களில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான சரஸ்வதி சோன்வானி என்கிற இளம்பெண்ணும், லல்லு சத்னாமி (25) என்கிற இளைஞரும் 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் டிசம்பர் 18 அன்று மாலை காதலனை சந்திப்பதற்காக அவனுடைய வீட்டிற்கு சரஸ்வதி சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில் லல்லு வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. மாறாக, வீட்டில் இருந்த லல்லுவின் தந்தை ஜலால் சத்னாமி (55), தாய் துக்கால்ஹா பாய் (50) மற்றும் அவரது சகோதரரின் மனைவி நைனி பாய் (22) ஆகியோர், சரஸ்வதி மீது ம ண்ணெண்ணையை ஊ ற்றி தீ வைத்து கொ ளுத்தியுள்ளனர்.
இதில் 80 சதவீத தீக்காய ங்களுடன் மீ ட்கப்பட்ட சிறுமி, வேகமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, சி கிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், துக்கால்ஹா பாய் மற்றும் நைனி பாய் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய ஜலால் சத்னாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.