டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பரிதாபமாக மரணம்!!

830

பிகார் மாநிலம் சர்தார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு சஹர்சா என்ற பெண்ணுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை நடந்தது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இன்று அந்தப் பெண் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ”மருத்துவமனை நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் சிகிச்சையில் தவறு நடந்துள்ளது.

இதை மருத்துவர்கள் எங்களிடம் மறைத்துவிட்டனர் இது பெருங்குற்றமாகும்.

தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னரும் சஹர்சா எங்களால் காப்பாற்ற முடியவில்லை’ என்று அவரது குடும்பத்தினர் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்

வீட்டுக்கு திரும்பும்போது ஏற்பட்ட விபத்து ஒன்றின் காரணமாக மருத்துவமனையில் சஹர்சா சேர்க்கப்பட்டார் அங்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.