திருமணம் முடிந்த பெண்கள் பின்பற்ற வேண்டியவை!!

1050

திருமணம் முடிந்து ஒரு குடும்பத்திற்கு தலைவி எனும் பொறுப்பை ஏற்கப் போகும் பெண்கள் அனைவரும் சில பழக்கங்களை சரியாக பின்பற்றி வந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைவதுடன், நிறைய அதிர்ஷ்டங்களையும் பெறலாம்.

திருமணம் முடிந்த பெண்கள் பின்பற்ற வேண்டியவை:பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து, வீட்டுக் கதவைத் திறக்கும் போது, மகாலட்சுமியே வருக என்று 3 முறைகள் கூற வேண்டும்.
காலை 4-6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

வீட்டில் காலை மற்றும் மாலையில் இருட்டுவதற்கு முன்பாக விளக்கேற்ற வேண்டும். ஆனால் மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.வீட்டில் விளக்கு ஏற்றிய பின் தலை சீவுதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்ற செயல்களை செய்யக் கூடாது.

விளக்கு வைத்த பின் வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வீசக் கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்கவோ அல்லது கொடுக்கவோ கூடாது.திருமணம் முடிந்த பெண்கள் தங்களின் நெற்றியில் எப்போதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கு முன் குடும்பத் தலைவி முதலில் தனது நெற்றியில் குங்குமம் இட்டு அதன் பின் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.பால் காய்ச்சினால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்கலாம். அதனால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

வெள்ளிக் கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக் கூடாது. அது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆனால் பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.