திருமணம் நடக்கவிருந்த கடைசி நேரத்தில் மகளை குத்திக்கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!!

644

கேரளாவில் மகள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர், தந்தை அவரை குத்திக்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malappuram நகரை சேர்ந்த ஆதிரா (22) என்ற பெண், நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோருக்கு தெரியாமல் இன்று மாலை தனது காதலனை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தார்.

இதனை அறிந்த தந்தை, தனது மகளை தடுத்து நிறுத்தி அவளுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

மகள் திருமணம் செய்துகொள்வதில் விடாப்படியாக இருக்கவே, கோபம் கொண்ட தந்தை, திருமணம் நடப்பதற்கு முன்னர் மகளை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இக்கொலை குற்றத்திற்காக ஆதிராவின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.