கொரோனா வைரஸ் அ ச்சத்தால் உறவினர்கள் இல்லாமல் திருமணம் செய்துகொண்ட ஜோடி!!

814

சீன ஜோடி

கொரோனா வைரஸ் அ ச்சத்தால் ஒரு சீன ஜோடி, உறவினர்களை அழைக்காமல் வீட்டுக்குள்ளேயே திருமணம் செய்துள்ளனர். உலகையே அச் சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒவ்வொரு நாளும் ப லி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,

வெளியில் செல்வதற்கே சீன மக்கள் அ ச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சீனாவை சேர்ந்த ஒரு ஜோடி, தங்களது திருமணத்தை எளிமையாக வீட்டில் நடத்தியுள்ளனர்.

கிழக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தை சேர்ந்த ஜாங் லாங் மற்றும் சென் சியாவோ என்கிற ஜோடி, கடந்த சில மாதங்களுக்கு முன் 50 மேஜை விருந்து, 20 திருமண கார்களை முன்பதிவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸின் தீவிரத்தால், திருமணம் உள்ளிட்ட சடங்குகளை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில், ஆடம்பரத்தை ரத்து செய்துள்ளனர்.

அவர்களுடைய திருமணத்தில் பெற்றோர் உட்பட 6 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மணமகளின் தாய் புகைப்பட கலைஞராக உருவெடுத்திருந்தார். திருமணம், சில நூறு யுவான்கள் செலவில் எளிமையான முறையில் வீட்டில் நடந்தேறியுள்ளது.