நூலிழையில் நான் உயிர் தப்பினேன் : இறந்தவர்கள் குடும்பத்துக்கு 1 கோடி தருகிறேன் : கமல்ஹாசன்!!

922

இந்தியன் 2 படப்பிடிப்பில் உ யிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு 1 கோடி நிதி வழங்குகிறேன் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் – காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்கி வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகரிலுள்ள படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு படப்பிடிப்பு தளத்தில் மிகப் பெரிய மின்விளக்குகளை ராட்சச கிரேன்களின் மீது அமைத்து கொண்டிருந்தபோது, கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உ
யிரிழந்துள்ளனர்.

மேலும், கிரேன் விழுந்த இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், படப்பிடிப்பு தளத்தில் உ யிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி வழங்குகிறேன்.

இதை என் குடும்பத்தில் நடந்த விபத்தாகவே கருதுகிறேன் சினிமா துறையில் போதிய பா துகாப்பு இல்லை என்பதை இந்த விபத்து காட்டுகிறது கிரேன் விபத்தில் இருந்து நான் நூலிழையில் உ யிர் த ப்பினேன் என கூறியுள்ளார்.