சோகமாக முடிந்த தேனிலவு: பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை : மனைவிக்கு ஏற்பட்ட நிலை!

613

இந்தியாவில் தேனிலவுக்கு மனைவியுடன் சென்ற புதுமாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்தவர் ரோஷன் சிங். இவருக்கும் பன் சிகா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் புதுமணதம்பதிகள் டார்ஜலிங்குக்கு தேனிலவு சென்றனர். இவர்களுடன் குடும்ப நண்பர் ஒருவரும் உடன் சென்றுள்ளார்.மேற்கு வங்காளம் – சிக்கிம் எல்லை பகுதியில் உள்ள டீஸ்டா ஆற்றில் மூவரும் படகு சவாரி செய்த போது படகு ஆற்றில் கவிழ்ந்தது.

இதில் புதுமாப்பிள்ளை ரோஷன் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தார்.அவர் மனைவி சிகா படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இவர்களுடன் வந்த குடும்ப நண்பர் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது.