கொரோனாவால் காரையே குடியிருப்பாக மாற்றிய மருத்துவர் : நெகிழ வைக்கும் பின்னணி!!

510

காரையே குடியிருப்பாக மாற்றிய மருத்துவர்..

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருவது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

போபாலில் அமைந்துள்ள ஜே.பி.மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் சச்சின் நாயக். இவரே பணி முடித்து வீடு திரும்பாமல் காரில் தங்கி வருபவர்.

தான் வீட்டுக்குச் சென்றால் கொரோனா வைரஸ் தன் மனைவியையும் குழந்தையையும் பாதித்துவிடுமோ என்ற அச்சமே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

மருத்துவமனை வளாகத்திலேயே தன்னுடைய காரை இருப்பிடமாக மாற்றியுள்ள சச்சின் நாயக், அதில் தன்னுடைய அத்தியாவசியப் பொருள்கள், புத்தகங்கள் ஆகியவற்றை வைத்துள்ளார்.

ஓய்வு நேரத்தில் காரில் வைத்திருக்கும் புத்தகங்களைப் படிப்பது. பின்பு, தன்னுடைய குடும்பத்தினரிடம் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசுவது என தனக்கான ஓய்வு நேரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கே செல்லாமல் காரிலேயே உறங்கியும் வருகிறார். இது குறித்துத் தெரிவித்துள்ள சச்சின் நாயக், கடந்த சில நாள்களாக போபாலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் நான் வீட்டுக்குச் செல்லாமல் என்னை நானே தனிமைப்படுத்திக்க முடிவு செய்தேன். எனவே நான் என்னுடைய காரிலேயே தங்கிவிடுவதென முடிவெடுத்தேன்