ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 மாத குழந்தை உட்பட 17 பேருக்கு கொரோனா!!

757

17 பேருக்கு கொரோனா..

இந்தியாவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது. எனவே இந்திய அரசு தீவிரமாக கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி இன்று வரை அமலில், இருந்த ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 10,363பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 10மாத குழந்தையும் அடங்கும்.

மேலும், அவர்கள் தொடர்பில் இருந்த 24 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தபோதிலும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 17பேரும் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள், வசித்த பகுதி முழுவதும் சீலிடப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.