எஜமானரை துப்பாக்கியால் சுட்ட நாய்: அதிர்ச்சி சம்பவம்!

555

அமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த எஜமானரை, அவரது நாய் எதிர்பாராதவிதமாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி. இவர் ‘பாலே’ என்று பெயரிட்டு நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், தனது நாயுடன் ரெமி சோபாவில் அமர்ந்தபடி இருந்துள்ளார். அப்போது துள்ளிக் குதித்து விளையாடிய அந்த நாய், திடீரென அவரது இடுப்பு Belt-யில் வைத்திருந்த 9M.M ரக துப்பாக்கியை பறித்தது.

அதன் பிறகு, எதிர்பாராதவிதமாக தனது காலால் துப்பாக்கியின் Pistol-யை இழுத்தது. இதனால் துப்பாக்கியில் இருந்து சீறிய குண்டு, ரிச்சர்ட் ரெமியின் உடலில் பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த ரெமி அவசர உதவி மையத்தை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது தனது நாய் தன்னை சுட்டுவிட்டதாகவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.