பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி : 12 பேர் படுகாயம்!!

1019

 

பள்ளத்தாக்கில் பஸ் கவிந்ததில் 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மனவ் பகுதியில் இருந்து ராஜ்கர் பகுதிக்கு பயணிகள் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. நானேட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராமல் திடீரென்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.