அந்த பெண்ணை கல்யாணம் செய்யமாட்டேன் : விரக்தியில் இளைஞர் செய்த விபரீத செயல்!!

757

திருமணத்திற்கு பெண் பார்ப்பது பிடிக்காமல் காவலர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவர் தஞ்சாவூரில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பயிற்சி எடுத்து வந்தார். 30ம் திகதி பயிற்சி நிறைவு பெறும் நிலையில் நேற்று மதியம் கழிப்பறைக்கு செல்வதாக நண்பர்களிடம் கூறிவிட்டு தினேஷ் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும், அவர் திரும்பி வராததால் அங்கு சென்று நண்பர்கள் பார்த்துள்ளனர். அப்போது, பிளேடால் கழுத்தையும் வலது கையையும் அறுத்து தினேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தினேஷ்குமாருக்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர், 20 நாள்களுக்கு முன் பெண் பார்த்துள்ளனர். அந்த பெண்னை பிடிக்கவில்லை என தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பயிற்சி முடித்தவுடன் திருமணம் என பெற்றோர் கூறியதால் தினேஷ்குமார் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.