தியேட்டரில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலதிபர்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கமெரா!

717

இந்தியாவில் சினிமா பார்க்க சென்ற சிறுமியை பாலியல் கொடுமை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தன் பெண் தோழியுடன் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் திகதி அங்கிருக்கும் திரையரங்கில் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது சிறுமிக்கு அருகில் இருந்த நபர் ஒருவர் சினிமா தியேட்டரின் இருட்டை பயன்படுத்திக் கொண்டு அந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமி தன்னுடன் வந்த பெண்ணிடம் கூறிய போதும், அவர் சினிமா பார்ப்பதில் ஆர்வம் காட்டியதால் சிறுமியின் புகாரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதன் பின் திரைப்படம் முடிந்தவுடன் யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் அந்த நபர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் குறித்த திரையரங்கில் திருட்டு சம்பவம் குறித்து புகார் எழுந்ததால், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தியேட்டர் ஊழியர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அதில் இருந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அதில் குறித்த சிறுமிக்கு அந்த நபர்நடந்த பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது வெட்டவெளிச்சமாகியது.

இதனால் சினிமா தியேட்டர் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அதன் பின் வழக்கு பதிவு செய்த பொலிசார் குறித்த நபரை தேடிய போது, அவர் திரிதுலாவைச் சேர்ந்த மைதின் குட்டி என்பது தெரிய வந்துள்ளது.

அவர் அந்த பகுதியில் பிரபல தொழிலதிபர் ஆவார். தொழிலதிபர் என்பதால் அவரை கைது செய்ய பொலிசார் தயக்கம் காட்டியதாகவும், அரசியல் தலையீடு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த தகவல் வெளிவந்ததால், மலப்புரம் மாவட்டம் மக்கள் அவரை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்.இதையடுத்து வேறு வழியின்றி அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.