சிகிச்சைக்கு வந்த பெண்ணை அரைநிர்வாணமாக்கி பிசியோதெரபிஸ்ட் செய்த செயல்: அதிர்ச்சியடைந்த நண்பர்!!

685

சிங்கப்பூரில் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிசியோதெரபிஸ்ட்டுக்கு 11 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசித்து வருபவர் லூக்கா மணிமாறன் தேகராஜூ(43). இந்தியரான இவர் அங்கு பிசியோதெரபிஸ்டாக உள்ளார். அதாவது உடலியக்க பயிற்ச்சி நிபுணர்.

இந்நிலையில் இவரிடம் கடந்த மார்ச் மாதம் 18 வயதான பெண் ஒருவர் தன் நண்பருடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவர் தனக்கு முதுகு வலியும், இடுப்பு வலியும் இருப்பதாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து லூக்கா மணிமாறன், அவருக்கு 15 நிமிடங்கள் உடலியக்க சிகிச்சை தேவைப்படுவதாக கூறி, தெரபி அறைக்கு அழைத்துச் சென்று, அங்கிருக்கும் மசாஜ் படுக்கையில் படுக்குமாறு கூறியுள்ளார்.

அந்த பெண்ணுடன் வந்த நண்பர் வெளியில் காத்துக் கொண்டிருந்தார்.

தெரபி அறைக்குள் சென்ற லூக்கா மணிமாறன், அந்தப் பெண்ணை மேலாடையை விலக்கிக்கொள்ளுமாறு கூற அந்தப்பெண்ணும் இதெல்லாம் சிகிச்சையின் ஒரு பகுதி என கருதி, அவர் கூறிய படியே அனைத்தையும் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு உடலியக்க சிகிச்சை அளித்த அவர், தகாத முறையில் தொட்டு அத்துமீறியுள்ளார்.

எதிர்பாரதவிதமாக உடன் வந்த நண்பர் சிகிச்சை அறை கதவை திறந்து பார்த்த போது, அவரின் எல்லை மீறலை புரிந்து கொண்டார்.

கிளினிக்கில் இருந்து இருவரும் வந்த பின் தொடர்ந்து பேசிய போது பிசியோதெரபிஸ்ட் வரம்புமீறி பாலியல் தொல்லை செய்து இருப்பதை உணர்ந்தனர்.

அதன் பின் இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளனர். வழக்கை விசாரித்த பொலிசார் வழக்கு பதிவு செயது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

நீதிமன்ற விசாரணையின் போது, அவரது பாலியல் தொல்லை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 11 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி 3 பிரம்படி கொடுக்கும் படியும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.