அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவருக்கு இரண்டு லாட்டரிகளில் கோடிக் கணக்கில் பணம் விழுந்துள்ளதால், தற்போது பணக்காரராக மாறியுள்ளார்.அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் நியூ சவுத்வேல்ஸ் லாட்டரி நிறுவனத்திடமிருந்து லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியிருந்தார்.
இந்த லாட்டரி சீட்டுக்கு கடந்த வாரம் திங்கட் கிழமை நடந்த குலுக்கலில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 487 அவுஸ்திரேலியா டொலர்(இலங்கை மதிப்பு 11 கோடிக்கு மேல்), பரிசுத் தொகையாக விழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அதே நிறுவனத்திடம் வாங்கியிருந்த லாட்டரி ஒன்றிற்கான குலுக்கல் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது, அப்போது அவருக்கு 14 லட்சத்து 57 ஆயிரத்து 834 அவுஸ்திரேலியா டொலர்(16 கோடிக்கு மேல்) பரிசாக விழுந்துள்ளது.
மொத்தம் தனக்கு கிடைத்த 25 லட்சம் மதிப்பிலான டொலர்(இலங்கை மதிப்பு 29 கோடி) பரிசுத் தொகையை ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முதலீடு செய்யப்போவதாகவும், தனக்கு பிடித்தமான கார்களை வாங்குவதிலும், வெளிநாடு சுற்றுலா செல்வதிலும் கொஞ்சம் தொகையை செலவழிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் ஏராளமான அரசு மற்றும் தனியார் லாட்டரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் ஒருவரே தனது வாழ்நாளில் இரண்டு முறை பரிசு பெற்றதுண்டு. ஆனால், ஒரே வாரத்தில் அதே நபர் இருமுறை பரிசு பெற்றது இதுவே முதல்முறை என லாட்டரி நிறுவனம் கூறியுள்ளது.