டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி, தமிழில் மிருகம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஆதி.
இந்நிலையில் நடிகர் ஆதியுடன் மரகத நாணயம் உள்ளிட்ட இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணி, ச மீபத்தில் ஆ தி வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால் இருவரும் கா தலித்து வருவதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
நடிகர் ஆதியின் தந்தை ரவிராஜா தெலுங்கில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியதோடு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
கடந்த 14-ம் தேதி இவரது பிறந்தநாளை ஆதி உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டிலேயே கொண்டாடியுள்ளனர். கொரோனா அ ச்சுறுத்தலால் யாரையும் அழைக்காமல் வீட்டில் சிம்பிளாக நடந்த இந்த நிகழ்வில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொ ண்டுள்ளார். அதற்கான புகைப்படங்களை நடிகர் ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் ப கிர்ந்துள்ளார்.
ஊரடங்கின் போது தனது வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ஆதி நிக்கி கல்ராணிக்கு மட்டும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மரகதநாணயம் படப்பிடிப்பிலிருந்தே இருவருக்கும் கா தல் ஏற்பட்டதாகவும் விரைவில் இருவீட்டார் ச ம்மதத்துடன் இருவரும் தி ருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. ஆனால் இதுகுறித்து இருவரும் வா ய்திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.