ஐபோன் 11 உற்பத்தியைத் தொடங்கிய ஆப்பிள்..! மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்த்த அமெரிக்க நிறுவனம்..!

695

ஐபோன் 11…..

மேக் இன் இந்தியா பிரச்சாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் அதன் முதன்மை ஐபோன் 11’ஐ இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியது. சமீபத்திய தகவல்களின்படி, சென்னைக்கு அருகிலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 11 தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிளின் நடவடிக்கை பலவிதமான உலக அரசியல் பின்னணிகளைக் கொண்டுள்ளது. பாரம்பரியமாக, அதிக எண்ணிக்கையிலான ஆப்பிள் தொலைபேசிகள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது ஐபோன் உற்பத்தி, ஓரளவாவது இந்தியாவுக்கு மாற்றப்படுவதற்கு மோ சமடையும் அமெரிக்க-சீனா உறவுகள் இதில் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பெங்களூருவுக்கு அருகிலுள்ள விஸ்ட்ரான் ஆலையில் புதிய ஐபோன் எஸ்.இ தயாரிக்கும் திட்டத்தை ஆப்பிள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் முந்தைய ஐபோன் எஸ்.இ. தயாரிக்கப் பயன்படுத்தப்படும் யூனிட் திரும்பப் பெறப்பட்டது.

மேலும் சீனா மீதான உலக நாடுகளின் பார்வை மாறிவருவதாலும், சீனாவை நம்பியிருப்பதைக் குறைப்பதற்காக ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.