பூமியில் தங்கவேட்டையில் ஈடுபட்ட 2 பேருக்கு கிடைத்த 1.87 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள்! எந்த நாட்டில் தெரியுமா?

277

அவுஸ்திரேலியா……..

அவுஸ்திரேலியாவில் இரண்டு பேர் தங்க வே ட்டையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 1.87 கோடி மதிப்புள்ள 2 தங்க கட்டிகளை கண்டெடுத்துள்ளது அங்கு ப ரபர ப்பாக பேசப்பட்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் தர்ணகுல்லா என்ற நகரம், தங்க சுரங்க நகரம் ஆகும். இங்கு பிரெண்ட் ‌ஷானன், ஈதன் வெஸ்ட் என்னும் 2 பேர், பூமியில் தங்க வே ட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு அங்குள்ள ஒரு இடத்தில் தங்கத்தை தேடிக்கொண்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தை அவர்கள் தோண்டியபோது, அதில் 2 தங்க கட்டிகளை கண்டெடுத்தனர்.

அந்த கட்டிகள் இரண்டும் சேர்த்து 3½ கிலோ எடை இருந்தன. அவற்றின் மதிப்பு 2½ லட்சம் அமெரிக்க டொலர் (சுமார் ரூ.1 கோடியே 87 லட்சம் ரூபாய்) ஆகும்.

இது குறித்து ஈதன் வெஸ்ட் கூறுகையில், இவை நி ச்சயமாக மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.

ஒரே நாளில் இரண்டு பெரிய தங்க கட்டிகள் கிடைத்திருப்பது மிகவும் ஆ ச்சரியமான ஒன்றாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய டி.வியில் சன் ரைஸ் என்ற நிகழ்ச்சியில் தோன்றிய பிரெண்ட் ‌ஷானன், நாங்கள் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தோம். இந்த கட்டிகள் இதுவரை தோண்டப்படாத இடத்தில் இருந்து கிடைத்தன என்று கூறியுள்ளார்.