நான் வந்துட்டேனு சொல்லு! CSK அணிக்கு விளையாட கெத்தாக டுவிட் போட்ட இந்திய வீரர்!!

750

இந்தியாவில் நடைபெறும் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், இந்தாண்டு வரும் வரும் 7-ஆம் திகதி துவங்கி மே 27-ஆம் திகதி முடிவடையவுள்ளது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சூதாட்ட புகார் காரணமாக விளையாடமால் இருந்த ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் களமிறங்குகின்றன.

இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளே நிலையில், ஹர்பஜன் சிங் பயிற்சிக்காக சென்னை நேற்று வந்தடைந்தார்.

சென்னை வந்த அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் ஹர்பஜன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,

நான் வந்துட்டேன்னு சொல்லு!!

தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா.

உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, “வீரமா”, காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே “மெர்சலாகுது”

தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!என்று குறிப்பிட்டுள்ளார்.